Wednesday, April 7, 2021

 சித்தர்கள் என்பவர்கள் யார்?

அவர்கள்து நோக்கம் என்ன? 

நாமும் சித்தராக முடியுமா?


இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.


மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.


சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…


தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;


தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;


தன்னை அறியும் அறிவை அறிந்தபின்


தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!


என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.


அகத்தியரும்..


"மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா";


"மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!"


என்கிறார்.


ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.


மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?


இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!


சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.


வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.


அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.


சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும். சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.


“ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. “

- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.


ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.


சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.


உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.


எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

 சூட்சும விஞ்ஞானம் என்றால் என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.


சூட்சும விஞ்ஞானம் : நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.


1.மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது அதற்கு தூரம் தடை இல்லை.


2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.


3.நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.


4.ஒவ்வொரு மனிதனுக்கும்  சூ‎ட்சும  சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.


5.சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.


6.மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.


7.பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.


8.சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.


9.மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.


10.மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.


11.மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.


12.கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.


13.மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.


14.சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.


15.நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.


16.மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.


17.மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.


18.நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது. 


19.ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.


20.மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.


21.நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.


22.நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.


23.வலி என்பது உடலின் மொழி.

அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.


24.நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.


25.வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.


26.உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.


27.விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.


28.நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.


29.நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.


30.தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.


31.அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.


32.கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.


33.உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.


34.கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.


35.மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.


36.செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.


37.ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.


38.பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.


39.சூ‎ரிய  ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.


40.மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.


41.மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.


42.தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.


43.நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது. 


44.நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.


45.தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.


46.தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.


47.பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே. 


48.போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.


49.தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.


50.தூக்கம் என்பது, விழிப்புணர்வு அற்ற தியானம்.தியானம் என்பது

விழிப்புணர்வுடன் கூடிய தூக்கம்.


அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் ஈசனிடம் யாசகியின் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே


ஆலவாயர் அருட் பணி மன்ற தந்தையே நமஸ்காரம்


இனிய ஈசன் அருளுடன் இனிய சிவ காலை வணக்கங்கள்

 #ஆன்மீக_குறிப்புகள்

1, ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

2. செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

3. வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

4. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

5. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

6. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

7. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

8. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருகும்.

9. ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

10. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

11, சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

12. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

13. பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

14.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

15. சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

16. காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.

17. தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

18, விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

19. விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?

20. வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

21. எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

22, எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

23, வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

24, எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

25.எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.


26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.


27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.


28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.


29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது…🙏🙏🙏


*தினமும் ஒரு சண்டையால், உங்கள் குடும்பத்தில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டதா?

 சந்தோஷமான, சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்க்கையை வாழ, இந்த தீபத்தை ஏற்றினால் போதும்.*


 *சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பமா? குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் அவ்வப்போது வருவதும் போவதுமாக தான் இருக்கும். ஆனால் சண்டை போடுவதையே சதா காலமும் வேலையாக வைத்திருக்கக் கூடாது. ஆனால் சில வீடுகளில் பொழுது விடிந்து பொழுது போனால் பிரச்சனை! பிரச்சனை! முதலில் தேவையற்ற விவாதங்கள், வாக்குவாதங்கள் என்று தொடங்கி அந்த பிரச்சனையே குடும்பத்தை இரண்டாக பிரிக்கும் அளவிற்கு சென்றுவிடும். வீட்டில் எந்த நேரமும் சண்டை சச்சரவுகள் இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி நிலைத்திருக்காது. மகாலட்சுமி தங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. சண்டை சச்சரவுகள் இல்லாத நிம்மதியான குடும்பத்தை பெற ஆன்மீக ரீதியான என்ன வழிபாட்டினைச் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு குடும்பத்திற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் சரியாக கிடைக்கவில்லை என்றாலும், சந்திர பகவானின் அனுக்கிரகம் சரியாக கிடைக்கவில்லை என்றாலும் அந்த வீட்டில் குடும்ப பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். ஆக சூரிய பகவானையும் சந்திர பகவானின் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு நம்முடைய வீட்டில் எந்த முறையிலான வழிபாட்டினை செய்யலாம்?*


*இந்த பரிகார தீபத்திற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். மஞ்சள் கயிறு, ஒரு மண் அகல் தீபம், தீபம் ஏற்றுவதற்கு கட்டாயமாக விளக்கெண்ணெய் வேண்டும். பஞ்சு திரியை எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் நிற நூலை வாங்கிக் கொண்டாலும் சரி, அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளை நூலில் மஞ்சள் தடவி நிழலில் உலரவைத்து மஞ்சளாக மாற்றிக் கொண்டாலும் சரி. உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பூலத் தட்டை வைத்துவிட்டு, அதன் மேல் மஞ்சள் கயிறை வட்டவடிவமாக சுற்றி வைத்து விடுங்கள். இந்த மஞ்சள் கயிறு மேல் அகல் தீபத்தை வைத்து, விளக்கெண்ணை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், குடும்பத்தில் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை குறிப்பாக அமாவாசை தினங்களில் தவறாமல் செய்து வர வேண்டும். அமாவாசை தினத்தன்று இந்த தீபத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி குல தெய்வத்தையும் முன்னோர்களையும் வேண்டி, சூரிய பகவானை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள்*


 *அடுத்தபடியாக பவுர்ணமி தினத்தன்று இதேபோல் வழிபாட்டை உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளி பக்கத்திலோ அல்லது வீட்டிற்கு பின் பக்கத்திலோ இந்த வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் ஏற்றி வைக்கக் கூடிய இந்த தீப சுடரில் அந்த சந்திர பகவானின் கதிர்வீச்சு விழ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். (அமாவாசை தினத்தில் எப்படி தாம்புல தட்டின் மேல் மஞ்சள் கயிறை வைத்து, அதன் மேல் மண் அகல் தீபத்தை வைத்து, விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தீர்களோ அதேபோல் தான், பௌர்ணமி தினத்தன்றும் தீபம் ஏற்ற வேண்டும்.) பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் இந்த தீப வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு மற்ற விஷயங்களை வீட்டில் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. வீட்டில் அழுக்கு துணிகள் சேர்ந்தால், வீட்டில் சுவர்களில் விரிசல் விழுந்தால், நிலை வாசப்படி அசுத்தமாக இருந்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் கட்டாயம் வரும். எந்த பரிகாரங்களை செய்தாலும், வீட்டில் இருக்கும் உறவினர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மனதார நினைத்து ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றாலே பிரச்சனையில் பாதி முடிந்து விடும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்..

**********

ரசமணியின் பயன்களும் அதன் ரகசியங்களும


rasamani

ரசமணி


ரசமணி என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ‘ரசம்’ என்றால் பாதரசம். திரவ நிலையை கொண்ட இந்த உலோகம், நம் உடலுக்கு கெடுதலை தரும். ஆனால் சித்த வைத்தியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளில் பாதரசம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பாதரசத்தை மருந்தாகப் பயன்படுத்தும் போது தீராத நோய்களும் தீரும் என்று சித்தர்களின் வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது.


rasamani


இப்படி சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்த பாதரசத்தை கடினமான உலோகமாக மாற்றி, மணியாக செய்து, கயிரில் கோர்த்து கழுத்தில் கட்டிக்கொண்டால் ஏராளமான பயன்கள் உண்டு என்கிறது சித்தர்களின் ரகசிய குறிப்பு.


திரவத் தன்மையை கொண்ட பாதரசத்தை அரிய மூலிகைகளுடனும், பாஷானத்துடனும் சேர்த்து கடினமான உலோகமாக மாற்றுவது ரசவாதம் என்று கூறுவார்கள். இப்படி ரசவாதத்தில் மூலமாக செய்யப்பட்ட ரசமணி ஏராளமாக இருக்கிறது.


ரசவாதத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட சிலைதான் பழனியில் உள்ள ‘ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலை’. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ‘போகர் சித்தர்’ இந்த நவபாஷாண சிலையை ரசவாதத்தின் மூலம் வடிவமைத்து பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்த சிலையின் மீது பட்டு வெளிவரும் தீர்த்தத்தை குடித்தால் தீராத நோய்களும் தீர்கின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு உண்மை.


ரசமணியின் பயன்கள் சித்தர்களுக்கு


இரும்பைக் கூட தங்கமாக மாற்றும் சக்தி


சித்தர்களின் ரசவாதம் வெறும் வைத்தியத்தோடு மட்டும் நின்று விடவில்லை. ஞானசக்தி, யோகசக்தி இவைகளிலும் சித்தர்கள் சிறந்து விளங்கினார்கள். எந்த ஒரு உலோகமானாலும் அதை தங்கமாக மாற்றும் உலோகமாற்றும் வித்தையை சித்தர்கள் அறிந்திருந்தனர். இந்த வித்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடிய இல்லை. இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. கலியுகத்தில் இது அறியப்படாமல் இருப்பதே நல்லது.


இடம்பெயர்தல்


சித்தர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர ரசகுளிகை என்று கூறப்படும் ரசமணியை பயன்படுத்தி வந்தார்கள். முறையான மந்திரங்களை ஓதி, சரியான மூலிகைகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த ரசமணியை சித்தர்கள் வைத்திருந்தார்கள். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயற வேண்டும் என்றால் இந்த ரசமணியை வாயில் போட்டு கொள்வார்கள். இது சித்தர்களுக்கு காற்றில் பறக்கும் சக்தியை கொடுக்கின்றது. இப்படித்தான் போகர் இந்தியாவிலிருந்து சீன தேசத்திற்கு சென்றதாக கோரக்க சித்தர் கூறுகின்றார்.


இப்படிப்பட்ட மந்திர தந்திரங்களை அறிந்துகொள்ள மனிதர்கள் ஒன்றும் ஞானிகளோ, சித்தர்களோ மகான்களோ அல்ல. பணத்தாசை இல்லாமல், மற்ற ஆசைகளை எல்லாம் துறந்த சித்தர்களுக்குள்ளேயே இந்த வித்தையெல்லாம், சித்தர்கள் மறைவது போலவே, இப்படிப்பட்ட மந்திர, தந்திரங்களும் மறைந்துவிட்டது. ஆனால் மனிதனுக்கு பயன்படும் வகையில், மருத்துவத்தை சித்தர்கள் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இந்த ரசமணியால் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி காண்போம்.


வாதம் பித்தம் கபம்


மனிதனின் உடலுக்கு இந்த மூன்று நிலைகளும் மிகவும் முக்கியமானது. இந்த மூன்றும் சமமாக இருந்தால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாதம் என்பது நம் உடம்பில் உள்ள ஒரு வாயு. இது நம் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. பித்தம் என்பது நம் உடலின் வெப்பநிலையை தருகின்றது. கபம் என்பது நம் உடலுக்கான குளிர்ச்சியைத் தருகின்றது. இந்த மூன்றும் நம் உடம்பில் அதிகரித்தாலும், குறைந்தாலும் நம் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. வாதம் கூடினாலும், பித்தம் கூடினாலும், கபம் கூடினாலும் நம் உடலில் 1482 வியாதிகள் வந்துவிடும். இந்த வாதம் பித்தம் கபம் சமநிலை படுத்த இந்த ரசமணி உதவி செய்கிறது.


ரத்த அழுத்தம்


ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ரசமணியை அணிவதால் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை இயல்புக்கு திரும்பிவிடும். நம் உடலில் உள்ள சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட இது உதவி செய்கிறது. உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் இது பயன்படுகிறது.


எதிர்மறை சக்திகள்


நம் உலகத்தில் எத்தனையோ எதிர்மறை ஆற்றல் கொண்ட சக்திகள் இருந்துதான் வருகின்றது. அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த ரசமணிகள் பெரிதும் பயன்படுகிறது. மற்றவர்கள் நமக்கு வைக்கும் பில்லி, சூனியம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மால் விடுபட முடியும்.


பிரகாசமான முகம்


இந்த ரசமணியை அணிந்து கொண்டால் நம் மனதிலுள்ள ஒளியானது தூண்டப்பட்டு நம் முகம் பிரகாசமாக ஜொலிக்க படுகிறது. அதுமட்டுமில்லாமல் நம் அறிவு வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் அதிகரிக்கப்படுகிறது. நமது வயது முதுமை அடைந்தாலும், நம் உடலை இளமையோடு வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்போதுமே இருக்கிறது. என்றும் நம் தேகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க இதை அணிந்து கொள்ளலாம்.


தாம்பத்திய வாழ்க்கை

கணவன்-மனைவி இடையே ஒற்றுமைய


ை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்க ரசமணிக்கு ஒரு பங்கு உண்டு. விந்தணுவை கெட்டியாக்கும் சக்தியும் ரசமணிக்கு உண்டு.


வியாபாரம்


நல்ல முறையில் நேர்மையாக நடத்தப்படும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு இந்த ரசமணி துணையாக நிற்கும். நாம் வாகனத்தில் செல்லும் பொழுது விபத்துக்களை தடுக்க ரசமணி பயன்படுத்தப்படுகிறது.


சிறு குழந்தைகளுக்கு


காத்து, கருப்பு அண்டாமல் சிறுகுழந்தைகளை பாதுகாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் இருந்து பாதுகாக்க ரசமணியானது உதவுகின்றது.


அஷ்டமா சித்தி


இந்த ரசமணி வைத்து அஷ்டமா சித்திகளையும் விளையாடிப் பார்க்கலாம் என்பது சித்தர்களின் வாக்கு. ஆனால் அதைப் பற்றின குறிப்புகள் நம் கண்களில் புலப்படவே இல்லை. கலியுகத்திற்கு அது தேவையும் இல்லை. அஷ்டமாசித்திகளை பற்றி அறியாவிட்டாலும், மனிதனுக்கு பயன்தரக்கூடிய ரசமணியை பற்றி அறிந்து இருப்பது மனிதர்களின் பாக்கியம்.


ரசமணி கிடைக்கும்



எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்


🌟 நெய் - கடன் தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். 


🌟 நல்லெண்ணெய் - நோய்கள் நீங்கும். நவகிரகங்களின் அருள் உண்டாகும். 


🌟 தேங்காய் எண்ணெய் - மனத்தெளிவு உண்டாகும்.


🌟 விளக்கெண்ணெய்  - புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும். 


🌟 வேப்ப எண்ணெய் - கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 


🌟 இலுப்பை எண்ணெய் - உடல் வளம் உண்டாகும்.


🌟 வேப்ப எண்ணெய்   இலுப்பை எண்ணெய் - சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.


🌟 நெய்   வேப்ப எண்ணெய்   இலுப்பை எண்ணெய் - செல்வம் சேரும். 


🌟 விளக்கெண்ணெய்   இலுப்பை எண்ணெய்   நெய்   நல்லெண்ணை   தேங்காய் எண்ணெய் - பராசக்தி அருள் உண்டாகும். மந்திர சித்தி தரும். கிரகதோஷம் நீங்கும்.

Tuesday, April 6, 2021


 *🔱இந்த 2 பொருட்களை சேர்த்து வீட்டின் நிலை வாசலில் கட்டினால் போதுமே! எல்லா தரித்திரமும் நீங்கி நல்லதே நடக்கும்🔱*



*இந்த பிரபஞ்சத்தில் எந்த அளவிற்கு நல்ல சக்திகளின் ஆதிக்கம் இருக்கிறதோ! அதே அளவிற்கு கெட்ட சக்திகளின் ஆதிக்கமும் நிறைந்து காணப்படுகிறது. திடீரென இனம் புரியாத மனமாற்றம் நம்மை மகிழ்ச்சியில் இருந்து வேறு ஒரு சோகமான நிலைக்கு உட்படுத்தும். இதையே எதிர்மறை ஆற்றல்கள் என்று கூறுகிறோம். இத்தகைய எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சில தரித்திர நிலைகளை நம்முடைய வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு நம் கையில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்*


*வீட்டில் இதுவரை இருந்து வந்த அமைதியான சூழ்நிலை திடீரென மாறி சண்டை, சச்சரவுகள் உடன் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பார்கள். கணவன்-மனைவிக்குள் வாய் தகராறு ஏற்படும் பின்னர் அது கைகலப்பாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இது போல தேவையில்லாத பிரச்சனைகள் தீர்வதற்கு எளிய பரிகாரம் ஒன்றை செய்து கொண்டால் போதும். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நல்ல ஒரு ஆற்றல்கள் அதிகரிக்கத் துவங்கும்.*



*இதனால் உங்கள் தொழிலில் இருக்கும் மந்த நிலை மாறும்! நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க குலதெய்வத்தின் அருள் எப்போதும் இருக்க வேண்டும். குலதெய்வம் பெயர் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொள்வது உத்தர*


*அவரவர்களின் குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு கருப்பு துணியில் 27 என்கிற எண்ணிக்கையில் கருஞ்சீரகம் மற்றும் சிறிதளவு வெண்கடுகு சேர்த்து ஒரு சிறிய முடிப்பாக முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முடிப்பை உங்களுடைய வீட்டின் நிலை வாசலில் அதாவது பிரதான வாசலின் மேலே நடுப்பகுதியில் கட்டி தொங்க விடுங்கள். உங்களுடைய குலதெய்வ மந்திரம் தெரிந்தவர்கள்! குலதெய்வத்தின் உடைய மந்திரத்தை 3 முறை உச்சரித்து பின் மேலே நிலை வாசலில் கட்டி தொங்க விடலாம். குலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் ஓம் சரவணபவ என்கிற முருகனுடைய மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தது பின் இந்த பரிகாரத்தை செய்யலாம்.*


*பொதுவாகவே வீட்டின் நுழை வாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. இதனால் வாசல் கதவில் தங்கியிருக்கும் தெய்வங்கள் வீட்டிற்குள் எப்பொழுதும் நாம் கூப்பிட்ட குரலுக்கு வருவார்கள். அதனால் தான் வீட்டின் நிலை வாசலை எப்பொழுதும் சத்தம் போடும் படியாக வைத்திருக்கக் கூடாது என்பார்கள். கதவை அடிக்கடி ஆட்டுவதும் அதன் மேல் ஏறி நின்று விளையாடுவதும் கூடாது.*



*தாழ்பாளை எப்பொழுதும் சத்தம் போடும் படியாக வைத்து இருந்தால் அதனை உடனடியாகச் சரிசெய்து விட வேண்டும். இல்லை என்றால் குல தெய்வ குற்றம் ஏற்பட்டு விடும். சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு விட்டால் தாழ்பாளை பழையது போல் சத்தம் போடாமல் வேலை செய்யும். எப்பொழுதும் நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் இட்டு அகல்விளக்கு ஏற்றி வழிபட்டு வர வேண்டும். நிலை வாசலுக்கு மேலே இந்த வெண்கடுகு மற்றும் மிளகு கட்டி தொங்க விடும் பொழுது எந்த ஒரு துஷ்ட சக்தியும் நிலைவாசலை தாண்டி உள்ளே வர முடியாது. அத்தகைய பேராற்றல் கொண்ட இந்த 2 பொருட்கள் எப்பொழுதும் வீட்டில் வைத்துக் கொள்வது நலம் தரும்*


 

ஸ்ரீலஸ்ரீ #மகானந்த #சித்தர் சுவாமிகள்: #மகாதேவமலை.

30 வருடங்களுக்கும் மேலாக நீர், உணவுஇன்றி வாழும் அபூர்வ சித்தர், மகாதேவன் மலை, ஸ்ரீமஹானந்த சித்தர். இவர் இளமையிலேயே இறைவனின் பெயரால் பல தொண்டுகளை மக்களுக்குப் புரிந்தார்.

ஒருநாள் மஹா ஆனந்தர் முன் சிவபெருமான் தோன்றி "நீவிர் பிறவிப் போற்றுத்தவர்". "நீவிர் ஆயிரம் ஆண்டுகள் வாழும் பேறு பெற்ற சித்தர்" நீவிர் மஹாதேவமலை சென்று குகையனுள் குடிகொண்டு, எம்மை வழிபட்டு பக்தர்களைக் காத்துக் கடவாயாக", என்று கூறி மறைந்தார்.

மகா ஆனந்த சித்தர் இறைவனின் கட்டளைக்கிணங்க புறப்பட்டு மகா தேவமலையை அடைந்தார். சில நாட்களுக்குப் பிறகு, இறைவன் மீண்டும் மகா ஆனந்த சித்தர் முன் தோன்றி "நீவிர் இனி பல் துலக்குவதும், நீராடுவதும் சித்திரை-1அன்றே என்றும், நீவிர் எவரிடமும் தர்மம் கேட்கக்கூடாது" என்றும், "சகல செல்வங்களும் இங்கு வந்து குவியும்" என்றும், இம்மலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் இம்மலையின் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் தீவினை நொடிகளிலிருந்து காக்க வேண்டும்", என்று கூறி இறைவன் மறைந்தார்.

சிவபெருமான் சிரசின் மீது அமர்ந்துள்ள ஐந்து தலை நாகத்தின் வடிவே சுவாமிகளின் சிரசின் மீது காணும் வடிவாகும்.

இதற்கு சுவாமிகள் நாடொறும் மணம் கமழம் மலர்களையும், நறுமணம் வீசும் இலைகளையும் வைத்து பூஜிக்கின்றார்.

உயிர் வாழ உணவு இன்றியமையாதது தான் எனினும், உண்ணாமலும், உயிர் வாழ்வது சாத்தியமே; என வாழ்ந்து காட்டிவரும் சித்த புருஷர் "சுவாமி மகானந்தர்", பல ஆண்டுகளாக எவ்வகை உணவும் உண்பதில்லை, தண்ணிரும் அருந்துவதில்லை என்பது வியக்கத்தக்கது.

சித்தரும் சித்தவைத்தியமும்:

நம் மகானந்த சித்தர், அபூர்வ மூலிகைகளை போகர் சித்தர் திருவருளால் அறியப்பெற்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். 

யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய முப்பெரும் சிறப்பு வாய்க்கப் பெற்றவர். அரிய மூலிகை மருந்துகளால் வாய்பேசாத நிலையினரும் குணம் அடைந்துள்ளனர். பிள்ளைப்பேறு இல்லாதோர், மகா ஆனந்த சித்தரை அணுகி வேண்ட சுவாமிகள் அருளால், மலடு நீங்கி மகப்பேறு அடைகின்றனர்.

மகாதேவ மலை சித்தர் அமைவிடம்:

சென்னை-பெங்களுர் இருப்புப்பாதையில் முக்கிய ரயில் சந்திப்பு #காட்பாடி. காட்பாடியிலிருந்து மேற்கே #குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் மகாதேவ மலைக்கான வரவேற்பு வளைவு உள்ளது. குடியாத்தம் நகரின் அருகில், மகாதேவமலை அடிவாரத்தில் சித்தரைக் காணலாம்.

💐ஓம் நமசிவாய ஓம்🙏🏻

 #சிவபெருமானின்_19_அவதாரங்களை #பற்றி_நாம்_அறியாத_ரகசியங்கள் !


#சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். #சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். 


#சிவபெருமானை பற்றி பார்க்கையில் வெகு சிலருக்கே அவர் எடுத்த 19 அவதாரங்கள் பற்றி தெரியும். #சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருந்தது அது மனிதர்களை தீமைகளில் இருந்து #காப்பாற்றும் நோக்கமே ஆகும்.


#பிப்லாட் அவதாரம்:


ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் #சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை வளரும் போதுதான் புரிந்து கொண்டார். #இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார்.


#நந்தி அவதாரம்:


#நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்பட்டார்.


#வீரபத்ர அவதாரம்:


#தட்சிணா யாகத்தில் சதிதேவி தன்னை பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையிலிருந்து சிறிது முடியை எடுத்து அதை தரையில் போட்டார் அப்போது அதிலிருந்து பிறந்தவர்தான் வீரபத்திர அவதாரம்.

 

#பைரவ அவதாரம்:


#பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்று சண்டை வரும்போது சிவபெருமான் இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார். அப்போது பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் துண்டித்தார். ஒரு #பிராமணனை கொன்ற குற்றவுணர்வு சிவபெருமானுக்கு இருந்தது.


#அஸ்வத்தாமா அவதாரம்:


#பார்கடலை கடையும் பொழுது சிவபெருமான் கொடிய நெஞ்சை உட்கொண்ட அந்த நேரத்தில் அவர் தொண்டை எரிய துவங்கியது. அப்போது #சிவபெருமானின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே வந்தது அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன்படி பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும்  சத்திரியர்களைக் கொள்வான் விஷ்ணுபுருஷ்.


#ஷரபா அவதாரம்:


#ஷரபா வடிவத்தில் உள்ள சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ புராணத்தின் படி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்கவே இந்த அவதாரம் எடுத்தார்.


#கிரகபதி அவதாரம்:     

                                          

#விஷ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் மகனாக பிறந்தார். சிவபெருமான் அவருக்கு கிரகபதி என பெயரிட்டார் விஷ்வணார். பிரகபதிக்கு ஒன்பது வயது ஆன நிலையில் அவர் இறக்கப் போகிறார் என்று நாரதர் கூறினார். பின்பு சிவபெருமானிடம் ஆசி பெற்றதால் அவருக்கு இருந்த தோஷம் விலகியது.


#துருவாச அவதாரம்:


#அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடை பிடிப்பதற்காக இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.

துர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவி ஆவார்.


#அனுமான் அவதாரம்:


#குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் அவதாரம்தான் ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு பணிபுரிய இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்துள்ளார்.


#ரிஷப அவதாரம்:


#பார்க்கடல் கடைதளுக்கு பிறகு கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான் அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கு தங்கி இருந்த பொழுது விஷ்ணு #பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரன் குணத்தை உடையவனாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர் அப்பொழுது காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து அனைத்து கொடிய மகன்களையும் கொன்றார்.


#யாதிநாத் அவதாரம்:


#ஒரு முறை பழங்குடி சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான் அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆவார்கள் ஒரு முறை யாகித் வடிவில் சிவபெருமான் சந்தித்தார் அவர்கள் இருக்கக்கூடிய சின்ன குடிசையில் விருந்தாளிகளை தங்க வைத்து தாங்கள் இரண்டு பேரும் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆனால் அன்று இரவு வன விலங்குகளால் கொல்லப்பட்டார் அப்போது அவர் மனைவி சாக நினைத்தால் தனது உருவத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார் அதன்படி அவளும் அவள் கணவனும் மீண்டும் மண்ணில் பிறப்பர்.


#கிருஷ்ண தர்ஷன் அவதாரம்:


ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.


விசு வரியா அவதாரம்:


அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்து மனிதனை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.


சுரேஷ்வர் அவதாரம்:


தனது பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவிலே